சர்கஸ் பயிற்சியாளரை தாக்கிக் கொன்ற புலிகள்

இத்தாலியின் தென்பகுதியில் உள்ள சர்கஸ் ஒன்றில், நான்கு புலிகள் சேர்ந்து அதன் பயிற்சியாளரை கொன்றுள்ளன.
ட்ரிகியனோ என்ற இடத்தில் உள்ள சர்கஸில் பணியாற்றி வந்த 61 வயதான எட்டோர் வெபர் என்பவரை முதலில் ஒரு புலி தாக்க, பின்னர் மற்ற மூன்று புலிகள் சேர்ந்து கொண்டன.
கூண்டிற்குள் அப்புலிகள் அவரை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் சர்கஸ் ஊழியர்களும், மருத்துவர்கள் குழுவும் வந்து அவரை மீட்டனர். ஆனால், பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

ஒர்ஃபெய் சர்கஸில் பணியாற்றி வந்த வெபர், இத்தாலியின் தலைசிறந்த சர்கஸ் பயிற்சியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
சர்கஸில் வனவிலங்குகள் பயன்படுத்துவதை ஐரோப்பாவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் பாதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தடை செய்துள்ளன.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-48891078
Post a Comment